
















வரலாற்று சிறப்புமிக்க யாழ் நல்லூர் அலங்கார கந்தன் தேவஸ்தான வருடாந்த மகோற்சவத்தின் இருபத்தியிராண்டாம் மாம்பழ தண்டாயுதபாணி காலைத்திருவிழா இன்று பக்திபூர்வமாக இடம்பெற்றன
கருவரையில் வீற்று இருக்கும் அலங்கார வேலனுக்கும் விஷேட,அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்று வசந்த மண்டபத்தில் அருள் பாலிக்கும் விநாயகர் முருகன்,விஷேட ஆராதணைகள் இடம்பெற்று எலி,மயில் வாகனத்தில் வீற்று வெளிவீதியில் அருள்பாலித்தார்..
இவ் மஹோற்சவ கிரியைகளை ஆலய பிரதம சிவஸ்ரீ வைகுந்தன் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியர்கள் நடாத்தி வைத்தனர்.
கடந்த 09.08 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய மஹோற்சவ 25 நாட்கள் இடம்பெறும் 31 ஆம் திகதி சப்பரமும் செப்டம்பர் 1 ஆம் திகதி தேர்த் திருவிழாவும் செப்டம்பர் 2 ஆம் திகதி காலை தீர்த்த திருவிழாவும் மாலை கொடியிறக்கமும் நடைபெறும்.செப்டம்பர் 3 ஆம் திகதி பூங்காவனமும் செப்டம்பர் 4 ஆம் திகதி வைரவர் உற்சவத்துடனும் மஹோற்சவம் நிறைவுக்கு வருகின்றது குறிப்பிடத்தக்கது
இதில் பல இடங்களில் வருகைதந்த பக்தர்கள் கலந்து கொண்டு பக்தர்கள் கலந்துகொண்டனர்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
