கடந்த காலத்தில் மாகாண சபை தேர்தலை பிற்போட்ட சூழ்ச்சியில் ரணிலும் சுமந்திரனுமே செயல்பட்டார்கள் - எம்.பி கஜேந்திரன் தெரிவிப்பு.

கடந்த காலத்தில் மாகாண சபை தேர்தலை பிற்போட்ட சூழ்ச்சியில் ரணிலும் சுமந்திரனுமே செயல்பட்டார்கள் என்று தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினரான செல்வராசா கஜேந்திரன்.
கட்சிப் பணிமனையில் நேற்று அவர் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் சுமந்திரன் ஆகிய இருவரும் தமது அதிகாரங்களை நிலைநிறுத்துவதற்காகவே செயல்படுகின்றார்கள்.
ஒன்றையாட்சி கட்டமைப்பின் மூலமே இந்த நாட்டை உயர்த்திவிடு வேன் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறியமை ஓர் ஏமாற்று நடவடிக்கை.
இதேநேரம், போரின் முடிவில் சரண டைந்தவர்கள் கொன்று புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வலுவாக தோன்றியுள்ளது. எதிர்வரும் 30 ஆம் திகதி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள போராட்டத்துக்கு பூரண ஆதரவை வழங்குகிறோம். இந்தப் போராட்டத்தில் அனைத்து தமிழ் மக்களும் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
