
யாழ்.திருநெல்வேலியில் அமைந்துள்ள பால் தொழிற்சாலை சீல் வைத்து மூடப்பட்டது.
திருநெல்வேலி பொதுச் சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவன் தலைமையிலான குழுவினரால் கடந்த 8 ஆம் மாதம் குறித்த பால் தொழிற்சாலை பரிசோதிக்கப்பட்டது.
இதன்போது அந்த தொழிற்சாலை சுகாதார சீர்கேட்டுடன் இயங்குவது அவதானிக்கப்பட்டது.
தொடர்ந்து பொதுச் சுகாதார பரிசோதகரால் இனங்காணப்பட்ட சுமார் 30இற்கும் மேற்பட்ட குறைபாடுகள் நிவர்த்தி செய்வதற்கு எழுத்து மூலமான அறிவித்தல் வழங்கப்பட்டது.
இவ் அறிவித்தல் பால் தொழிற்சாலை தலைவர், முகாமையாளர் மற்றும் பணிப்பாளர் சபையினருக்கு உரிய தெளிவுபடுத்தல்களுடன் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் கடந்த 12ஆம் திகதி பொதுச் சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவன் தலைமையிலான குழுவினரால் மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
இதன்போது, இரண்டு மாதங்கள் கடந்த நிலையிலும் குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்படாமை அவதானிக்கப்பட்டதை அடுத்து நேற்று முன்தினம் 14ஆம் திகதி யாழ். மேலதிக நீதிவான் நீதிமன்றில் குறித்த பால் தொழிற்சாலை முகாமையாளருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கை நேற்று முன்தினமே விசாரணைக்கு எடுத்துக்கொண்ட மேலதிக நீதிவான் எஸ். லெனின் குமார், பொதுச் சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவனால்
மன்றில் மேற்கொள்ளப்பட்ட சமர்ப் பணத்தை கருத்தில்கொண்டு குறித்த தொழிற்சாலையை சீல் வைத்து மூடுமாறு உத்தரவிட்டார்.
அத்துடன் 70 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்ததுடன், திருத்த வேலைகள் முடிந்தவுடன் பொதுச் சுகாதார பரிசோதகரை மன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு பணித்தார்.
இதனையடுத்து பால் தொழிற் சாலை சீல் வைத்து மூடப்பட்டது.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
