அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், பதவி விலகுவதற்கு முன்பு, இஸ்ரேலுக்கு 08 பில்லியன் டொலர் ஆயுத விற்பனை முன்மொழிவு

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், பதவி விலகுவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு, இஸ்ரேலுக்கு 08 பில்லியன் டொலர் ஆயுத விற்பனையை முன்மொழிந்துள்ளார்.
இஸ்ரேலியப் படைகள் நேற்று சனிக்கிழமை காசா பகுதி முழுவதும் மேற்கொண்ட சுமார் 30 தாக்குதல்களில் 70 பலஸ்தீனியர்கள் உயிரிழநந்துள்ளனர்.
குழந்தைகள் உட்பட பலர் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் மற்றும் மீட்பு பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எது எவ்வாறாயினும் காசாவில் அதிகரித்து வரும் இறப்பு எண்ணிக்கை பற்றிய பரவலான விமர்சனங்களை புறக்கணித்து, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், பதவி விலகுவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு, இஸ்ரேலுக்கு 08 பில்லியன் டொலர் ஆயுத விற்பனையை முன்மொழிந்துள்ளார்.
இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக நீடித்துள்ள நிலையில் இதுவரை 45,658 பலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதுடன் 108,583 பேர் காயமடைந்துள்ளன.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
