இசுருபாய கல்வி அமைச்சின் கட்டடத்தில் பொருத்திய 51 லட்சம் ரூபா பெறுமதியான செப்பு நாடாக்கள் மாயம். 8 ஊழியர்களிடம் வாக்கு மூலம்.

இசுருபாய கல்வி அமைச்சின் கட்டடத்தில் பொருத்திய 51 லட்சம் ரூபா பெறுமதியான செப்பு நாடாக்கள் மாயம். 8 ஊழியர்களிடம் வாக்கு மூலம்.
பத்தரமுல்ல பெலவத்தை இசுருபாய கல்வி அமைச்சின் கட்டட வளாகத்தின் மேல் பொருத்தப்பட்டிருந்த 51 லட்சம் ரூபா பெறுமதியான செப்பு நாடாக்கள் திருடப்பட்டமை தொடர்பில் 8 ஊழியர்களிடம் வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தலங்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர்களில் பல சாதாரண பணியாளர்களும் பல்வேறு அலுவலக அதிகாரிகளும் உள்ளடங்குகின்றனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கட்டட வளாகம் முழுவதும் பொருத்தப்பட்டிருந்த 1731 அடி மின்னல் கடத்தி செப்பு நாடாக்களே இவ்வாறு திருடப்பட்டுள்ளன என்று கல்வி அமைச்சின் அபிவிருத்தி அதிகாரி ஒருவர் தலங்கம பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.
வெளியாள்கள் யாரும் கட்டடத்தின் உச்சிக்கு செல்ல முடியாது எனவும் அங்கு பணிபுரிபவர்கள் மட்டுமே அந்த இடத்துக்குச் செல்ல முடியும் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
