
வடக்கு - கிழக்கு மீனவர்களிற்கான சீனாவின் பொருத்து வீடுகளைத் தொடர்ந்து அரிசியும் நேற்று மாவட்டங்களிற்கு எடுத்து வரப்பட்டுள்ளது.
சீன அரசினால் வடக்கு - கிழக்கு மீனவர்களிற்காக வழங்கப்பட்ட 500 பொருத்து வீடுகள் அடங்கிய பெட்டிகள் கெண்டெயினர்கள் மூலம் ஏற்கனவே எடுத்து வரப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து 50 கிலோவாக பொதி செய்யப்பட்ட அரிசியும் நேற்று முதல் எடுத்து வரப்படுகின்றது. இதற்கமைய யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு ஒதுக்கிய 7 ஆயிரத்து 436 மூடைகளில் 2 ஆயிரத்து 200 மூடை அரசி நேற்று எடுத்து வரப்பட்டு குருநகரில் களஞ் சியப்படுத்தப்பட்டது.
இவ்வாறு களஞ்சியப்படுத்தப்படும் அரிசியுடன் ஏனைய அரிசிகளும் மாவட்டத்திற்கு கிடைத்தவுடன் எதிர் வரும் 13ஆம் திகதி இவை மீனவர்களிற்கு வழங்கப்படவுள்ளது.
அண்மைய பதிவுகள்

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் கமெராக்களை நிறுவ நடவடிக்கை

யாழ்.அரியாலை - சித்துப்பாத்தி மனித புதைகுழியை குற்றப்பகுதி என்று குறிப்பிட்டு, மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பு

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு
