இலங்கை முன்னாள் எம்.பிகளுக்குரிய ஓய்வூதியம் இரத்துச் செய்யப்படவுள்ளது.-- ஜனாதிபதி தெரிவிப்பு
4 months ago

நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்களுக்குரிய ஓய்வூதியம் வெகுவிரைவில் இரத்துச் செய்யப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்களின் ஓய்வூதியம் நிறுத்தப்படவுள்ளது.
அத்துடன், இனிவரும் நாள்களில் நாடாளுமன்ற உணவகத்தில் சலுகை விலையில் உணவுகள் வழங்கப்படாது.
வெளியில் என்ன விலைக்கு பொதுமக்களுக்கு உணவுகள் விற்பனை செய்யப்படுகின்றனவோ, அதே விலைக்குத்தான் நாடாளுமன்ற உணவகங்களிலும் உணவுகளைப் பெறக்கூடியதாக இருக்கும் - என்றார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள உணவகங்களில் மானிய விலையிலேயே இதுவரை உணவு வழங்கப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
