இலங்கை முன்னாள் எம்.பிகளுக்குரிய ஓய்வூதியம் இரத்துச் செய்யப்படவுள்ளது.-- ஜனாதிபதி தெரிவிப்பு
3 months ago

நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்களுக்குரிய ஓய்வூதியம் வெகுவிரைவில் இரத்துச் செய்யப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்களின் ஓய்வூதியம் நிறுத்தப்படவுள்ளது.
அத்துடன், இனிவரும் நாள்களில் நாடாளுமன்ற உணவகத்தில் சலுகை விலையில் உணவுகள் வழங்கப்படாது.
வெளியில் என்ன விலைக்கு பொதுமக்களுக்கு உணவுகள் விற்பனை செய்யப்படுகின்றனவோ, அதே விலைக்குத்தான் நாடாளுமன்ற உணவகங்களிலும் உணவுகளைப் பெறக்கூடியதாக இருக்கும் - என்றார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள உணவகங்களில் மானிய விலையிலேயே இதுவரை உணவு வழங்கப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
