
கொழும்பு மாவட்டம் கெஸ்பவை பிரதேசத்தில் தமிழ் மாணவன் ஒருவர் வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கொழும்பு நகர் பாடசாலை யொன்றில் உயர்தரத்தில் கணிதப் பிரிவில் கல்வி கற்கும் 18 வயதுடைய மாணவனே தனது வீட்டில் தூக்கில் தொங்கியவாறு நேற்று செவ்வாய்க்கிழமை இரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
யோகேந்திரன் முகுந்தன் என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குடும்பத்தினருடனான முரண்பாடு காரணமாக மேற்படி மாணவன் தூக்கில் தொங்கி உயிரை மாய்த்திருக்கலாம் என்று பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காகக் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
