யாழில் மூன்று இளைஞர்கள் போதைப்பொருள் மறுவாழ்வுக்காக கந்தக்காடு புனர்வாழ்வு மையத்துக்கு அனுப்பி வைப்பு
2 months ago

யாழ்.மாவட்டத்தில் நீண்டகாலத்தின் பின்னர் ஒரே தடவையில் மூன்று இளைஞர்கள் போதைப்பொருள் மறுவாழ்வுக்காக கந்தக்காடு புனர்வாழ்வு மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
மானிப்பாய் பொலிஸாரால் அண்மையில் கைதுசெய்யப்பட்ட மூன்று இளைஞர்களிடம் மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனைகளில் அவர்கள் ஹெரோய்னுக்கு அடிமையானவர்கள் எனத் தெரியவந்தது.
அதனையடுத்து அவர்கள் மூவரையும் மறுவாழ்வு மையத்துக்கு அனுப்புமாறு நீதிமன்று உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
