போர் நிறுத்த பேச்சுக்கு ரஷ்யா முன்வந்த நிலையில் உக் ரைனின் தாக்குதலால் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

போர் நிறுத்த பேச்சுக்கு ரஷ்யா முன்வந்த நிலையில் உக் ரைனின் தாக்குதலால் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர் இன்று 907 நாளாக நீடித்து வருகிறது. இந்தப் போரில் இரு தரப்பிலும் பல்லாயிரக் கணக்கானோர் உயிரிழந்தனர்.
இந்தப் போரில் உக்ரைனுக்கு ஆயுத உதவிகளை அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகள் வழங்கி வருகின்றன. போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்து வரும் நிலையில் அமைதி பேச்சுக்கு இரு நாடுகளும் உடன்படாததால் போர் தொடர்ந்து நீடித்து வருகிறது.
இதனிடையே, 2 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் போரை முடிவுக்கு கொண்டுவர ரஷ்யா பேச்சுக்கு முன்வந்த நிலையில் உக்ரைன் நடத்திய தாக்குதலால் அந்த முயற்சி தகர்ந்துள்ளது.
கட்டார் தலைநகர் டோஹாவில் இம்மாத தொடக்கத்தில் உக்ரைன் - ரஷ்யா இடையே போர் நிறுத்த பேச்சுகள் நடைபெறவிருந்தது. இந்த நிலையில், ரஷ்யாவின் குர்ஷ்க் மாகாணத்தின் மீது உக்ரைன் திடீர் தாக்குதல் நடத்தியது. கடந்த 6ஆம் திகதி ஆயிரத்துக்கும் மேற்பட்ட உக்ரைன் படையினர், இராணுவ கவச வாகனங்கள், ஆயுதங்களுடன் ரஷ்யாவின் குர்ஷ்க் மாகாணத்துக்குள் நுழைந்தனர். மேலும், ரஷ்ய படையினர்களையும் பணயக் கைதிகளாக சிறைபிடித்தனர்.
அந்தப் பகுதியில் இராணுவ நிலைகளை அமைத்துள்ள உக்ரைன் இராணுவம் சுமார் 400 சதுர கிலோ மீற்றர் பரப்பளவை கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைனின் இந்த திடீர் தாக்குதலால் டோஹாவில் நடைபெறவிருந்த போர் நிறுத்த பேச்சுகளில் இருந்து ரஷ்யா பின்வாங்கியுள்ளது. இதன் மூலம் உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர் மேலும் பல மாதங்கள் நீடிக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
