வவுனியா - நெளுக்குளம் 4ம் கட்டை பகுதியில் 128 கிலோ மாட்டிறைச்சியுடன் வந்த வாகனத்துடன் இருவர் கைது
4 months ago

வவுனியா - நெளுக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 4ம் கட்டை பகுதியில் 128 கிலோ மாட்டிறைச்சியுடன் வாகனம் ஒன்றினை பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன் இருவரை கைது செய்துள்ளனர்.
நெளுக்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சி. எம்.பி.ஆர்.கே திவுல்வெவ தலைமையிலான பொலிஸ் குழுவினர் நெளுக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் திடீர்ச் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர்.
இதன்போது பட்டா ரக வாகனத்தை சோதனைக்குட்படுத்திய போது கொள்கலன்களில் 128 கிலோ மாட்டிறைச்சியை முறையற்ற முறையில் கொண்டு சென்றமைக்காக வாகனத்தை கையப்படுத்தியதுடன் சாரதி உட்பட இருவரை பொலிஸார் கைது செய்தனர்.
மேலதிக விசாரணைகளின் பின்னர், கையகப்படுத்தப்பட்ட 128 கிலோ மாட்டிறைச்சி, பட்டா ரக வாகனம் என்பவற்றுடன் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
