ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் சனிக்கிழமை இடம்பெறவுள்ள நிலையில் தேர்தல் பரப்புரைகள் இன்று நள்ளிரவுடன் முடிவு.
7 months ago


ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் சனிக்கிழமை இடம்பெறவுள்ள நிலையில் தேர்தல் பரப்புரைகளுக்கு இன்று நள்ளிரவு 12 மணியுடன் தடை விதிக்கப்படுவதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்தாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று நள்ளிரவுக்குப் பின்னர் தேர்தல் பரப்புரை, பேரணி, துண்டறிக்கை விநியோகம் மற்றும் வேட்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில் ஏதேனும் செயற் பாடுகளில் ஈடுபடுகின்றவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு அறிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை - ஜனாதிபதித் தேர்தலுக்கான இறுதித் தேர்தல் பரப்புரைக் கூட்டங்கள் இன்றையதினம் இடம்பெறவுள்ள நிலையில் பிரதான பரப்புரைக் கூட்டங்களை முன்னிட்டு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
