
கொழும்பு, மருதானை பொலிஸ் நிலையத்தின் சிறைக்கூண்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பெண் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் இன்று புதன்கிழமை இடம்பெற்றுள்ளது.
வவுனியா பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் நேற்று செவ்வாய்க்கிழமை மருதானை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தின் சிறைக்கூண்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்துள்ளார்.
இதன்போது, இந்தப்பெண்இன்று அதிகாலை 4 மணியளவில் பொலிஸ் நிலையத்தின் சிறைக்கூண்டினுள் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
