இலங்கைக் கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி மீன்பிடித்த 18 இந்திய மீனவர்கள் இன்று(03) கடற்படையினரால் கைது

4 months ago



இலங்கைக் கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி மீன்பிடித்த 18 இந்திய மீனவர்கள் இன்று(03) கடற்படையினரால் கைது              செய்யப்பட்டனர்.

காரைக்காலைச் சேர்ந்த 18 இந்திய மீனவர்கள் ஒரு படகில்          பருத்தித்துறை கடற்பரப்புக்குள் ஊடுருவி மீன்பிடியில் ஈடுபட்ட சமயம் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

இன்று காலை கைது செய்யப்பட்ட அவர்கள், கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

மேற்படி 18 இந்திய மீனவர்களும் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

அண்மைய பதிவுகள்