இலங்கைக் கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி மீன்பிடித்த 18 இந்திய மீனவர்கள் இன்று(03) கடற்படையினரால் கைது
4 months ago

இலங்கைக் கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி மீன்பிடித்த 18 இந்திய மீனவர்கள் இன்று(03) கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
காரைக்காலைச் சேர்ந்த 18 இந்திய மீனவர்கள் ஒரு படகில் பருத்தித்துறை கடற்பரப்புக்குள் ஊடுருவி மீன்பிடியில் ஈடுபட்ட சமயம் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
இன்று காலை கைது செய்யப்பட்ட அவர்கள், கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
மேற்படி 18 இந்திய மீனவர்களும் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
