இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம் 3 பிணைக் கைதிகளை ஹமாஸும், பதிலுக்கு 90 பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேலும் விடுவித்தன.











இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தம் அமுலுக்கு வந்த நிலையில் முதல் நாளில் 3 பிணைக் கைதிகளை ஹமாஸும், பதிலுக்கு 90 பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேலும் விடுவித்தன.
விடுதலை செய்யப்படும் இஸ்ரேல் பிணைக் கைதிகள் 3 பேரின் பெயரை ஹமாஸ் வெளியிட்டதை அடுத்து, காசாவில் நேற்று (19) போர் நிறுத்த ஒப்பந்தம் அமுலுக்கு வந்தது.
இஸ்ரேல் – ஹமாஸ் தீவிரவாதிகள் இடையே கடந்த ஓராண்டுக்கும் மேலாக நீடித்து வந்த போரில் பாலஸ்தீனர்கள் 47,000 பேர் உயிரிழந்தனர்.
இரு தரப்பும் இடையே போர் நிறுத்தம் ஏற்படுத்த கட்டார், அமெரிக்கா சார்பில் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
பிணைக் கைதிகளை விடுவித்தால் போரை நிறுத்துவதாக இஸ்ரேல் நிபந்தனை விதித்தது.
இந்த நிலையில், பிணைக் கைதிகள் பட்டியலை ஹமாஸ் அனுப்பியதைத் தொடர்ந்து, நேற்று மதியம் 2.45 மணி முதல் காசாவில் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது.
இதையடுத்து, இஸ்ரேல் பிணைக் கைதிகள் 3 பேர் செஞ்சிலுவை சங்கம் மூலம் விரைவில் விடுவிக்கப்படவுள்ளனர்.
இதையடுத்து, எஞ்சியுள்ள 98 இஸ்ரேல் பிணைக் கைதிகள் அடுத்தடுத்த கட்டங்களில் விடுவிக்கப்பட உள்ளனர்.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
