உலகில் புற்றுநோயாளர் எண்ணிக்கை 18 மில்லியனாக அதிகரிப்பு - வைத்தியர் யோகா அந்தோனி தெரிவிப்பு
உலகில் 18 மில்லியனாக இருக்கும் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை 2030 ஆம் ஆண்டளவில் 22 மில்லியனாக அதிகரிக்கும் என இலங்கை புற்றுநோய் சங்கத்தின் கண்டி கிளையின் வைத்தியர் யோகா அந்தோனி தெரிவித்துள்ளார்.
புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்ற போதிலும் விழிப்புணர்வினால் அதனை கணிசமான அளவில் கட்டுப்படுத்த முடியும் எனவும் அவர் மேலும் கூறினார்.
கண்டி மாவட்ட செயலாளர் காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற புற்று நோயைக் கட்டுப்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
உலகில் 18 மில்லியனாக இருக்கும் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை 2030 ஆம் ஆண்டளவில் 22 மில்லியனாக அதிகரிக்கும் அவர் இதன்போது கூறினார்.
ஆண்களுக்கு பொதுவாகக் காணப்படும் வாய்ப் புற்றுநோய் வெற்றிலை உண்பதினால் ஏற்படுவதாகவும், புகைப்பிடிப்பதினால் நுரையீரல் புற்றுநோய் ஏற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், மதுபானம் மற்றும் ஆரோக்கியமற்ற உணவுகளை கட்டுப்படுத்துவதன் மூலம் உணவுக்குழாய் மற்றும் குடல் தொடர்பான புற்றுநோய் பரவுவதை கட்டுப்படுத்த முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
