
விளையாடிக் கொண்டிருந்தபோது, தவறுதலாக மண்ணெண்ணெயை எடுத்து அருந்திய குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.
கோப்பாய் பகுதியைச் சேர்ந்த தர்சிகன் சஷ்வின் என்ற 14 மாதக் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
குழந்தையின் தாயார் உணவு தயாரித்துக் கொண்டிருந்த போது, கட்டிலுக்குக் கீழ் வைக்கப்பட்டிருந்த மண்ணெண்ணையை எடுத்து அந்தக் குழந்தை அருந்தியதுடன், தனது உடலிலும் ஊற்றி விளையாடியுள்ளது.
சிறிது நேரத்தில் குழந்தை மயக்க முற்றதைப் பார்த்த குடும்பத்தினர் கோப்பாய் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.
மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில், சிகிச்சையின் போது குழந்தை உயிரிழந்துள்ளது.
இறப்பு விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமச்சிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
