வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் உள்ளகப் பொறி முறையை நாம் முற்றாக நிராகரிக்கின்றோம்.

"வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் உள்ளகப் பொறி முறையை நாம் முற்றாக நிராகரிக்கின்றோம்.
சர்வதேச விசாரணையொன்றே இந்த விடயத்தில் எமது தீர்க்கமான முடிவு."- இவ்வாறு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான உறவுகளின் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
யாழ்.ஊடக அமையத்தில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர்கள் மேலும் தெரிவித்ததாவது:-
"நாங்கள் இப்போதும் எமது உறவுகளை தொடர்ச்சியாகத் தேடி வருகின்றோம்.
எமக்குரிய பதில்கள் இன்னமும் வழங்கப்படவில்லை.
காணாமல் ஆக்கப்பட்டோருக்காக அமைக்கப்படும் அல்லது பரிந்துரைக்கப்படும் உள்ளகப் பொறிமுறைகளில் எமக்கு நம்பிக்கையில்லை.
நாம் சர்வதேச விசாரணைகளையே திரும்பத் திரும்ப வலியுறுத்தி வருகின்றோம்.
அதுதான் எமது முதலும் முடிவுமான கோரிக்கையாக உள்ளது.
எமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்ற உண்மை வெளிப்படுத்தப்பட வேண்டும்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் தாய்மார்களுக்கு ஒரு இலட்சம் ரூபாவையோ அல்லது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவையோ வழங்கி போராட்டத்தை முடித்து விட இலங்கை அரசு முயன்று வருகின்றது.
பணத்தை நாம் கோரவில்லை. மரணச் சான்றிதழையும் நாம் கோர வில்லை. நீதிதான் எமக்குத் தேவை.
எனவே, சர்வதேசத்தை ஏமாற்றுவதற்காக அமைக்கப்படும் பொறிமுறைகளை நாம் திட்டவட்டமாக நிராகரிக்கின்றோம்." என்றனர்.
அண்மைய பதிவுகள்

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் கமெராக்களை நிறுவ நடவடிக்கை

யாழ்.அரியாலை - சித்துப்பாத்தி மனித புதைகுழியை குற்றப்பகுதி என்று குறிப்பிட்டு, மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பு

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு
