இலங்கையில் சுமார் பதினொரு இலட்சம் வழக்குகள் நிலுவையில் இருப்பதாக நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

2023ஆம் ஆண்டில் இலங்கையில் மொத்தமாக 11,22,113 2 வழக்குகள் தீர்ப்புகள் வழங்கப்படாது நிலுவையில் உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இவ்வாறு பல ஆண்டுகளாக வழக்குகள் நிலுவையில் இருப்பது நீதிமன்றத்துறை எதிர்நோக்கும் பாரிய சவாலாக கருதப்படுகின்றது.
நீதிவான் நீதிமன்றங்கள் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களில் அதிகளவு வழக்குகள் நிலுவையில் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
வழக்கு விசாரணைகளை மேற்கொள்ள போதியளவு நீதிபதிகள் இல்லாமையினால் இவ்வாறு வழக்குகள் நிலுவையில் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
2015ஆம் ஆண்டில் சுமார் ஏழு இலட்சம் வழக்குகள் நிலுவையில் இருந்ததாகவும் 2023ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 11 லட்சமாக உயர்வடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் நாட்டில் ஒரு மில்லியன் மக்களுக்கு19 நீதிபதிகள் என்ற அடிப்படையில் நீதிமன்றங்கள் இயங்கி வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
