யாழில் எலிக் காய்ச்சலால் 99 பேர் பாதிப்பு.சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவிப்பு

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் எலிக் காய்ச்சல் நோய் காரணமாக இதுவரை 99 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்தார்.
எலிக்காய்ச்சல் பரவல் தொடர்பாக ஊடகங்களுக்கு இன்று(17) கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தற்போது பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 23 பேரும், யாழ். போதனா வைத்தியசாலையில் 6 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த 24 மணிநேரத்தில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 9 நோயாளர்களும், யாழ் போதனா வைத்தியசாலையில் 5 நோயாளர்களும் எலிக்காய்ச்சலுடன் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணிநேரத்தில் இந்த நோய் காரணமாக எந்தவொரு இறப்பும் ஏற்படவில்லை.
இதுவரை யாழ். மாவட்டத்தில் இந்த நோய் காரணமாக 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
எலிக் காய்ச்சல் நோய் வராமல் தடுப்பதற்காகத் தடுப்பு மருந்து வழங்கும் பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.
யாழ். மாவட்டத்தில் இதுவரை ஏறத்தாழ 6 ஆயிரம் பேருக்குத் தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும், பாதிக்கப்பட்ட சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் காய்ச்சல் நோயாளர்களை இனங் காண்பதற்காக சுகாதாரப் பணியாளர்கள் வீடுவீடாகச் சென்று ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் உள்ள கால்நடைகளில் இந்தக் கிருமித்தொற்று உள்ளதா என்பதை ஆய்வு செய்வதற்காகக் கொழும்பிலிருந்து கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்திலிருந்து குழு ஒன்று யாழ். மாவட்டத்துக்கு நாளை வருகை தரவுள்ளது.” - என்றார்.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
