கோத்தாபய ராஜபக்ச ஆட்சியில் மருத்துவ மோசடி குறித்த விசாரணை முன்னெடுப்பு.-- அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவிப்பு
5 months ago

முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் மருத்துவத்துறையில் இடம்பெற்ற மோசடி குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சமகால அரசாங்கத்தின் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
கொரோனாத் தொற்றுக் காலத்தில் தடுப்பூசிகள் மற்றும் விரைவான என்டிஜென் சோதனைக் கருவிகளின் கொள்வனவுக்காக 3.2 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.
இதில், 2.2 பில்லியன் ரூபா, தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்தில் பதிவு செய்யப்படாத நிறுவனத்துக்கு செலவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த மோசடி குறித்த விவரங்கள் எதிர்காலத்தில் நாடாளுமன்றத் துக்கு அறிவிக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
அண்மைய பதிவுகள்

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் கமெராக்களை நிறுவ நடவடிக்கை

யாழ்.அரியாலை - சித்துப்பாத்தி மனித புதைகுழியை குற்றப்பகுதி என்று குறிப்பிட்டு, மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பு

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு
