
நெடுவூர்த் திருவிழா எதிர்வரும் ஓகஸ்ட் 4ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை நெடுந்தீவில் நடைபெறவுள்ளது.
நெடுந்தீவு ஊரும் உறவும் அமைப்பின் ஏற்பாட்டில் "மீண்டும் ஊருக்குப் போகலாம்" என்ற தொனிப்பொருளில் இந்த நிகழ்வு முன்னெடுக்கப்படவுள்ளது.
நெடுந்தீவிலிருந்து புலம் பெயர்ந்து வாழும் மக்கள், நெடுந்தீவு குறித்த ஆர்வலர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்பர்.
இந்த நிகழ்விலே மூலிகைக் கண்காட்சி, கல்விக் கண்காட்சி, பனைசார் உணவுகள், விவசாய கைவினைகள் கடலுணவு சார்ந்த உள்ளூர் உற்பத்தி பாரம்பரிய கலை நிகழ்வுகள், விளையாட்டு கள் நூல் வெளியீடு இலக்கிய வெளியீடு போன்றனவும் நடைபெறவுள்ளன.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
