வரலாற்று சிறப்புமிக்க யாழ் நல்லூர் அலங்கார கந்தன் தேவஸ்தான வருடாந்த மகோற்சவத்தின் திருமஞ்சத் திருவிழா இன்று பக்திபூர்வமாக இடம்பெற்றன









வரலாற்று சிறப்புமிக்க யாழ் நல்லூர் அலங்கார கந்தன் தேவஸ்தான வருடாந்த மகோற்சவத்தின் திருமஞ்சத் திருவிழா இன்று பக்திபூர்வமாக இடம்பெற்றன
கருவரையில் வீற்று இருக்கும் அலங்கார வேலனுக்கும் விஷேட, அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்று வசந்த மண்டப த்தில் அருள் பாலிக்கும் அலங்கார முருகன்,வள்ளி, தெய்வானைக்கு விஷேட,அபிஷேக, ஆராதனைகள் இடம் பெற்று எம்பெருமான் திருமஞ்சத்தில் வீற்று, வள்ளி, தெய்வானை வீற்று உள்வீதியுடாக வந்து வெளிவீதியுடாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
இவ் மஹோற்சவ கிரியைகளை ஆலய பிரதம சிவஸ்ரீ வைகுந்தன் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியர்கள் நடாத்தி வைத்தனர்.
கடந்த 09.08 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய மஹோற்சவ 25 நாட்கள் இடம்பெறும் 18 ஆம் திகதி மஞ்சமும் 31 ஆம் திகதி சப்பரமும் செப்டம்பர் 1 ஆம் திகதி தேர்த் திருவிழாவும் செப்டம்பர் 2 ஆம் திகதி காலை தீர்த்த திருவிழாவும் மாலை கொடியிறக்கமும் நடைபெறும்.
செப்டம்பர் 3 ஆம் திகதி பூங்காவனமும் செப்டம்பர் 4 ஆம் திகதி வைரவர் உற்சவத்துடனும் மஹோற்சவம் நிறைவுக்கு வருகின்றது குறிப்பிடத்தக்கது
பல இடங்களில் இருந்து ஆயிரக் கணக்கில் பக்தர்கள் வருகை தந்தனர்.
அண்மைய பதிவுகள்

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் கமெராக்களை நிறுவ நடவடிக்கை

யாழ்.அரியாலை - சித்துப்பாத்தி மனித புதைகுழியை குற்றப்பகுதி என்று குறிப்பிட்டு, மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பு

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு
