வடக்கு இஸ்ரேலில் உள்ள இராணுவ நிலைகளை விட்டு வெளியேறுக, மக்களுக்கு ஹிஸ்புல்லா அமைப்பு எச்சரிக்கை
7 months ago

வடக்கு இஸ்ரேலில் உள்ள இராணுவ நிலைகளை விட்டு வெளியேறுமாறு, மக்களுக்கு ஹிஸ்புல்லா அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இஸ்ரேல் படைகள் வடக்கு இஸ்ரேலில் உள்ள மக்களின் வீடுகளை இராணுவ தளங்களாக பயன்படுத்தி வருவதாக, வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சில காலமாக இஸ்ரேல் - லெபனான் எல்லை மோதல்கள் இருந்து வந்தாலும், கடந்த 23ஆம் திகதி முதல், ஹிஸ்புல்லா அமைப்பின் தளங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது.
லெபனானில் நடந்த மோதலில் 1,200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன் சுமார் ஒரு மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்தனர்.
ஹிஸ்புல்லா போராளிகளால் பரவலாகப் பயன்படுத்தப்படும் பேஜர்கள் உட்பட தகவல் தொடர்பு சாதனங்களை இஸ்ரேலின் அதிநவீன ரிமோட் வெடிப்பே இந்த மோதல்களுக்கு ஒரு முக்கிய காரணம் என, வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
