ரஷ்ய ரெட்விங் எயார் லைன்சில், 68 ஆயிரம் ரஷ்ய சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை.-- உதயங்க வீரதுங்க தெரிவிப்பு

ரஷ்யாவுக்கு சொந்தமான ரெட்விங் எயார் லைன்சில், 68 ஆயிரம் ரஷ்ய சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தரவுள்ளனர் என, ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.
நேற்று முதல், ரஷ்ய சுற்றுலாப் பயணிகள் வருகை தருவர்.
மொஸ்கோ உட்பட 6 ரஷ்ய நகரங்களில் இருந்து, வாரத்துக்கு ஆறு விமானங்கள், இலங்கைக்கு வருகை தரவுள்ளன.
எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி வரை, இந்த விமானங்கள், அம்பாந்தோட்டை விமான நிலையத்துக்கு வருகை தரவுள்ளன.
இவ்வாறு வருகை தரும் 68 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் மூலம், இலங்கைக்கு 102 மில்லியன் டொலர் கிடைக்கும்.
2022 இல், ரெட்விங்ஸ் மூலம், 94 ஆயிரத்து 795 சுற்றுலாப் பயணிகளை, எனது காலப் பகுதியில் ரஷ்யாவில் இருந்து கொண்டு வந்தேன்.
மத்தல விமான நிலையம் ஊடாக இலங்கை வந்த இவர்கள் மூலம், 150 மில்லியன் டொலர் வருமானம் கிடைத்தது.
நான் அரசியல் ரீதியாக பழி வாங்கப்பட்டுள்ளேன்.
அந்த வகையில், 9 வருட கால அரசியல் பழிவாங்கலை முடிவுக்கு கொண்டுவர வேண்டிய நேரம் இது-என்றார்.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
