ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் திணைக்களத்தின் செலவினங்களுக்கு 1.4 பில்லியன் ரூபா தேவைப்படுகிறது.
10 months ago

ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் திணைக்களத்தின் செலவினங்களைக் கணித்து, 1.4 பில்லியன் ரூபா தேவைப்படுவதற்கான விபரங்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்கவிடம் நாம் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
சாதாரண தபால், பதிவுத் தபால், எழுது பொருட்கள், போக்குவரத்து, நிர்வாகக் கட்டணம் உள்ளிட்ட பல செலவினங்களுக்காக இந்த மதிப்பீடு செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், இந்த மதிப்பீடு ஒரு முன்னறிவிப்பு மட்டுமே என்பதால், கோரப்பட்ட பணத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அண்மைய பதிவுகள்

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் கமெராக்களை நிறுவ நடவடிக்கை

யாழ்.அரியாலை - சித்துப்பாத்தி மனித புதைகுழியை குற்றப்பகுதி என்று குறிப்பிட்டு, மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பு

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு
