இலங்கையில் வாகன இறக்குமதிக்கு அனுமதி அளிப்பதாகக் கூறி பல நிறுவனங்கள் நிதிமோசடியில் ஈடுபடுகின்றன
5 months ago

வாகன இறக்குமதி தொடர்பில் அரசாங்கம் உறுதியான தீர்மானத்தை மேற்கொள்ளாத நிலையில், வாகன இறக்குமதிக்கு அனுமதியளிப்பதாகக் கூறி பல நிறுவனங்கள் நிதிமோசடியில் ஈடுபட்டுவருகின்றன என தெரிவிக்கப்படுகின்றது.
இது குறித்து இலங்கை மத்திய வங்கி கவனம் செலுத்த வேண்டும் என பேராசிரியர் அமிந்த மெட்சில பெரேரா வலியுறுத்தியுள்ளார்.
2025ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்குவதாக தற்போதைய அரசாங்கம் தெரிவித்திருந்த போதிலும், இதுதொடர்பில் இதுவரை எவ்வித தீர்மானமும் எடுக்கவில்லை.
எதிர்காலத்தில் வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படும் என்ற கருத்தை மக்கள் மத்தியில் உருவாக்கி புதிய வாகனங்களுக்காக சில நிறுவனங்கள் இலட்சக்கணக்கான ரூபாவை முற்பணமாகப் பெற்றுக்கொண்டு மோசடியில் ஈடுபடுகின்றன என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அண்மைய பதிவுகள்

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் கமெராக்களை நிறுவ நடவடிக்கை

யாழ்.அரியாலை - சித்துப்பாத்தி மனித புதைகுழியை குற்றப்பகுதி என்று குறிப்பிட்டு, மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பு

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு
