ஐந்து இலட்சம் இலங்கையர்கள் ஆபத்தான போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளனர் என்று ஆபத்தான போதைப் பொருள் கட்டுப்பாட்டுச் சபையின் அறிக் கைகள் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
'யுக்திய' நடவடிக்கையின் இரண்டாம் கட்டம் குறித்து ஊடக நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு அறிவிக்கும் கூட்டத்தில் கலந்து கொண்டபோதே பொலிஸ் மா அதிபர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
போதைப்பொருள் வியாபாரிகள் என அடையாளம் காணப்பட்ட 5 ஆயிரத்து 979 பேரில் 5 ஆயிரத்து 449 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை பொலிஸாரினால் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள்களின் பெறுமதி 190 மில்லியன் ரூபா எனவும், சட்டவிரோதமாக கைப்பற்றப்பட்ட வாகனங்கள் மற்றும் சொத்துகளின் பெறுமதி 11 ஆயி ரத்து 457 மில்லியன் ரூபா எனவும் பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித் துள்ளார்.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
