கனடாவில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற ஒருவரிடம் 85 இலட்சம் ரூபாவை தரகர் ஒருவர் திருடிச் சென்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது.

காணி வாங்குவதற்காக கனடாவில் இருந்து யாழ்ப்பாணம் வந்த புலம்பெயர் நபர் ஒருவரின் 85 இலட்சம் ரூபாய் பணத்தினை தரகர் திருடிச் சென்ற சம்பவம் ஒன்று யாழில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில், கனடாவில் இருந்து வருகை தந்த குறித்த நபர் தெல்லிப்பழையில் தங்கி இருந்துள்ளார்.
அதேவேளை, காணி ஒன்றினை கொள்ளளவு செய்வதற்காக தரகர் ஒருவருடன் தொடர்பினை பேணியுள்ளார்.
இந்நிலையில், கிளிநொச்சியைச் சேர்ந்த அந்த தரகர், கனடாவில் இருந்து வந்தவரின் 85 இலட்சம் ரூபாவினை திருடிச் சென்றுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, அந்த புலம்பெயர் நபர் நான்கு நாட்களின் பின்னர் தனது பணத்தினை தேடியுள்ளதுடன் பணம் காணாத நிலையில் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதற்கமைய, இச்சம்பவம் குறித்து தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் அந்நபர் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளார்.
மேலும், இது குறித்து தெல்லிப்பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
