யாழ்.மயிலங்காடு பகுதியில் தோட்ட கிணற்றிலிருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது.
5 months ago

யாழ்ப்பாணம் - மயிலங்காடு பகுதியில் தோட்ட கிணற்றிலிருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது.
மயிலங்காடு, எழாலை தெற்கு பகுதியைச் சேர்ந்த சுவாம்பிள்ளை வவி (வயது 46) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்.
இவர் கடந்த சனிக்கிழமை வீட்டிலிருந்து புறப்பட்டு சென்றிருந்தார்.
இந்த நிலையில் இரண்டு தினங்களாக அவரைக் காணாத உறவினர்கள் தேடுதலில் ஈடுபட்டு வந்தனர்.
இவ்வாறான சூழ்நிலையில் அவரது சடலம் தோட்டக்கிணறு ஒன்றில் இருந்து மீட்கப்பட்டது.
சடலம் மீதான விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
