சாட் நாட்டில் இராணுவம், பயங்கரவாதிகள் இடையே நடந்த மோதலில் 113 பேர் உயிரிழந்தனர்.

5 months ago



சாட் நாட்டில் இராணுவம், பயங்கரவாதிகள் இடையே நடந்த மோதலில் 113 பேர் உயிரிழந்தனர்.

வடக்கு - மத்திய ஆபிரிக்காவில் சாட் குடியரசு என்ற நாடு உள்ளது. இந்த நாட்டை சுற்றி லிபியா, சூடான் மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகள் அமைந்துள்ளன.

இங்கு போகோஹராம், ஐ. எஸ். ஐ. எஸ். போன்ற பயங்கரவாத அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன.

பயங்கரவாதிகளை ஒடுக்கும் நடவடிக்கையில் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் படையினருக்கும் பயங்கரவாத குழுக்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், சாட் நாட்டின் லேக் சாட் பகுதியில் இராணுவ சோதனைச் சாவடி மீது போகோஹராம் பயங்கரவாதிகள் நேற்று முன்தினம் மாலைதிடீர் தாக்குதல் நடத்தினர்.

இந்தத் தாக்குதலுக்கு இராணுவமும் பதிலடி கொடுத்தது.

இரு தரப்புக்கும் இடையே நடந்த மோதலில் 17 இராணுவத்தினர், 96 பயங்கரவாதிகள் என மொத்தம் 113 பேர் உயிரிழந்தனர். 

அண்மைய பதிவுகள்