யாழ்ப்பாணத்தில் சூரிய மின்னிணைப்பில் பாரிய ஊழல்- அறிக்கை வழங்குமாறு உத்தரவு ஜனாதிபதி செயலகம் அதிரடி
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் சூரியசக்தி மின்னிணைப்பு வழங் களில் முறைகேடுகள் இடம்பெறுவதாகத் தெரிவிக்கப் படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில், ஜனாதிபதி செயலகம் அறிக்கை யைக் கோரியுள்ளது.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் சூரியசக்தி மின்னிணைப்பு வழங்கலில் தொடர்ச்சியான முறைகேடுகள் இடம்பெறுவதாக, ஜனாதிபதி செயலகத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதைத் தொடர்ந்தே, இது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கையிடுமாறு வலுசக்தி அமைச்சுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் இயங்கும் பிராந்திய மின் இணைப்புப் பொறியியலாளர் காரியாலயத்தில் சூரியசக்தி இணைப்பு அனுமதிக்கான விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்படும்போது முறைகேடான விதத்தில்
அனுமதிகள் வழங்கப்படுவதாகவும், மிக நீண்டகாலமாக விண்ணப்பித்தவர்களின் ஆயிரக்கணக்கான விண்ணப் பங்கள் வேண்டுமென்றே கிடப்பில் போடப்பட்டுள்ளன என்றும், இவை குறித்து மின்சாரசபையின் பொது முகாமையாளருக்கு முறைப்பாடு செய்த வாடிக்கையாளர்கள் பழிவாங்கப்படுவதாகவும் ஜனாதிபதியின் குறைகேள் அதிகாரிக்கு முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதனையடுத்தே குறித்த விடயம் தொடர்பில் சுயாதீன விசாரணைகளை மேற்கொண்டு, அறிக்கையிடுமாறு ஜனாதிபதியின் செயலாளரால் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
