
மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபேகோனுக்கும், சீனா மக்கள் குடியரசின் தூதுக் குழுவினருக்குமிடையிலான சந்திப்பொன்று கண்டியிலுள்ள ஆளுநர் காரியாலயத்தில் நடைபெற்றது.
சீனாவின் தேசிய இனங்கள் ஆணைக்குழு அமைச்சர் பென் யூ தலைமையில் இந்த சீனக் குழுவினர் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.
இச் சந்திப்பில், மேலும், சுற்றுலாத்துறை
அபிவிருத்தி, சுற்றுலாத்துறையினரை கண்டிக்கு அழைத்து வருவது, இரு நாடுகளுக்குமிடையே காணப்படுகின்ற பௌத்த, சமய கலாசார உறவுகளையும் உயர் கல்வித்துறையையும் அபிவிருத்தி செய்வது மற்றும் சீனாவில் மேற்கொள்ளக் கூடிய உயர் கல்விக்கான புலமைப்பரிசில் திட்டம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாக ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இச்சந்திப்பில், சீனாவின் தேசிய இனங்கள் தொடர்பான ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் வே கொசிங், பணிப்பாளர் கியூபெங், பிரதிப்பணிப்பாளர் சென் சிங்கொங் மற்றும் சீனாவின் மின்சு பல்கலைக்கழக வெகுஜன தொடர்பு பிரிவின் உதவித் தலைவர் கியூ கியாங் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
அண்மைய பதிவுகள்

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.

வடக்கில் போதைக்கு அடிமையான சிறுவர், சிறுமிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கட்டுப்படுத்த முடியாமல் திணறும் அதிகாரிகள்

யாழ்.மருதனார்மடம் இராமநாதன் மகளிர் கல்லூரியில் சர்வதேச சூழல் தினமும், சர்வதேச நீர் தினப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர் கௌரவிப்பும்
