கனடா எயார் நிறுவனம் வேலை நிறுத்தம் காரணமாக விமான சேவைகளை இரத்து செய்யும் நிலை தோன்றியுள்ளது.

கனடா எயார் நிறுவனம் வேலை நிறுத்தம் காரணமாக நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை முதல் விமான சேவைகளை இரத்து செய்யும் நிலை தோன்றியுள்ளது.
திங்கட்கிழமை வெளியான ஓர் அறிக்கையில் எயார் கனடா தலைமை நிர்வாக அதிகாரி மைக்கல் ரூசோ இந்தத் தகவலை வெளியிட்டார்.
இந்த வேலை நிறுத்தத்தால் எயார் கனடா பயணிகள் 80 சதவீதம் பேர் பாதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் (15) இருதரப்பு தீர்வு எட்டப்படாவிட்டால், 72 மணி நேர வேலை நிறுத்த அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப் படுகிறது.
எயார் கனடா விமானிகள் வேலை நிறுத்தத்திற்கு முன்னதாக செயல்பாடுகளை இடைநிறுத்துவதற்கான திட்டங்களில் விமான நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
72 மணி நேர வேலை நிறுத்த அறி விப்பு காலம் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுக்குப் பின்னர் ஆரம்பிக்கும் நிலையில், அடுத்த புதன்கிழமைக்குள் (18) விமான சேவைகள் முழுமையாக நிறுத்தப்படும் எனவும் கூறப்படுகிறது.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
