
யாழ்ப்பாணம் - கொழும்பு இடையிலான ரயில் சேவை ஆரம்பமாவது மீண்டும் தாமதமாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டை காங்கேசன்துறை இடையிலான ரயில் சேவை இன்று திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்படும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
யாழ்ப்பாணம் கொழும்பு ரயில் சேவை கடந்த ஜனவரி மாதம் நிறுத்தப்பட்டது.
மஹவ -அநுராதபுரம் இடையிலான ரயில் பாதை புனரமைப்புப் பணிக்காகவே இந்த ரயில் சேவை நிறுத்தப்பட்டது.
ரயில் பாதை புனரமைப்பு பணிகள் செப்ரெம்பரிலேயே நிறைவடைந்துவிட்ட நிலையில் சமிக்ஞை அமைப்பு முறையில் ஏற்பட்ட குழப்பங்களால் ரயில் சேவையை ஆரம்பிக்கும் பணி தொடர்ந்து தாமதமாகி வந்தது.
ரயில் சேவையை மீண்டும் ஆரம்பமாவதாக முன்னரும் பல தடவைகள் அறிவிக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
