நாமல் ராஜபக்சவுக்கும் சுமந்திரனுக்கும் இடையில் இன்று முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்சவுக்கும் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கும் இடையில் இன்றைய தினம் முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் நாமல் ராஜபக்ச வெற்றி பெற்றால் வடக்கு, கிழக்கு எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் மாவட்டங்களின் அபிவிருத்தி குறித்து இருவரும் கலந்துரையாடியதாக தெரியவந்துள்ளது.
வட மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல்துறை உறுப்பினர் கீதாநாத் காசிலிங்கம் இதனை ஊடகங்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
மேலும், வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து செயற்பட தயார் என நாமல், சுமந்திரனிடம் தெரிவித்துள்ளார்.
அப்பகுதி மக்களின் குறைகளை நிவர்த்தி செய்வதுடன் இளைஞர்களுக்கு வாழ்வாதாரத்தையும் சிறந்த எதிர்காலத்தையும் பெற்றுக்கொடுக்க தயாராக இருப்பதாக நாமல் இதன்போது உறுதியளித்துள்ளார்.
தேர்தலில் வெற்றியடைந்தால் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள குடிமக்களுக்கு பிரகாசமான எதிர்காலம் ஒன்று உறுதி செய்யப்படும் என நாமல் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த மாவட்டங்களை சர்வதேச வர்த்தக மையங்களாக மேம்படுத்த தான் விரும்புவதாகவும் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
