கனடா சீக்கிய பிரிவினைவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைக்கு இந்திய உத்தரவிட்டதாக கனடா குற்றச்சாட்டு

கனடாவில் சீக்கிய பிரிவினைவாதிகளை குறிவைத்து வன்முறை, அச்சுறுத்தல் மற்றும் உளவுத்துறை தகவல்கள் சேகரிப்பு போன்ற நடவடிக்கைகளுக்கு இந்திய உள்துறை மந்திரி அமித் ஷா உத்தரவிட்டதாக கனடா வெளியுறவுத்துறை துணை மந்திரி டேவிட் மோரிசன் பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளார்.
அமித் ஷாவின் தொடர்பு பற்றி அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையிடம் உறுதி செய்த தகவலை, நாட்டின் பாதுகாப்பு குழுவின் உறுப்பினர்களிடம் மோரிசன் கூறியிருக்கிறார்.
எனினும், அமித் ஷாவின் தொடர்பு பற்றி கனடாவுக்கு எப்படி தெரியவந்தது? என்ற விவரத்தை மோரிசன் தெரிவிக்கவில்லை.
இதேபோல், வெளிநாட்டு மண்ணில் படுகொலைக்கான சதித்திட்டம் தீட்டியதாக இந்திய அதிகாரிகள் மீது அமெரிக்காவும் குற்றம்சாட்டியது.
நியூயார்க் நகரில் வசிக்கும் சீக்கிய பிரிவினைவாத தலைவரைக் கொல்லும் சதித்திட்டம் முறியடிக்கப்பட்டதாக கூறப்படும் வழக்கில், இந்திய அரசாங்கம் மீது அண்மையில் அமெரிக்க நீதித்துறை குற்றம்சாட்டியது.
அமெரிக்க நீதித்துறையால் அறிவிக்கப்பட்ட இந்த வழக்கில், இந்தியாவிலிருந்து நியூயார்க்கில் கொலை திட்டத்தை செயல்படுத்த கூலிப்படையை நியமித்ததாக இந்திய முன்னாள் உளவுத்துறை அதிகாரி விகாஸ் யாதவ் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
