யாழ்.பருத்தித்துறை புலோலியில் காய்ச்சல் காரணமாக இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார்.
4 months ago

யாழ்.பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புலோலி தெற்கு பகுதியில் காய்ச்சல் காரணமாக இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அதே இடத்தை சேர்ந்த கந்தசாமி சசிகுமார் (வயது 40) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.
மேற்படி நபருக்குக் கடந்த மூன்றாம் திகதி காய்ச்சல் ஏற்பட்டது. அவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
