அம்பாறை கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்துக்கு சென்ற எம்.பி கஜேந்திரகுமாருடன் பொலிஸார் முரண்பட்டனர்.

அம்பாறை கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்துக்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துடன் நேற்று பொலிஸார் முரண்பட்டதுடன் பதற்ற நிலையும் ஏற்பட்டது.
அம்பாறை திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் நேற்று மாவீரர் நினைவேந்தல் நடைபெற்றது.
நேற்று இம் மாவீரர் துயிலும் இல்லத் தில் மாவீரர் நாள் உணர்வு பூர்வமாக முன்னெடுக்கப்பட்டது.
நேற்று மாலை 6.05 நிமிடத்தில் மாவீரர்களுக்கான பொதுச் சுடர் ஏற்றி நினைவேந்தல் மேற்கொள்ளப்பட்டது.
அத்துடன் மாவீரர் நினைவேந்தலை அனுஷ்டிக்க அனுர அரசு இடமளிக்கும் என்று நம்பிக்கையுடன் அங்கு சென்ற மக்களிடம் பொலிஸார் பாதுகாப்புக் கெடுபிடிகளை விதித்து அங்கு செல்வதை தடுக்க முற்பட்டனர்.
அத்துடன் அங்கு சென்ற வாகனங்களின் இலக்கங்கள் பொலிஸாரினால் பதியப்பட்ட பின்னர் குறித்த மாவீரர் துயிலும் இல்லத்துக்கு மக்கள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
அங்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துடன் பொலிஸார் முரண்பட்டனர்.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
