ஐஸ்லாந்து நாட்டில் சுமார் 8 ஆண்டுகளுக்குப் பிறகு தென்பட்ட துருவக் கரடியை பொலிஸார் சுட்டுக் கொன்றனர்.

ஐரோப்பிய கண்டத்தில் உள்ள தீவு தேசமான ஐஸ்லாந்து நாட்டில் சுமார் 8 ஆண்டுகளுக்குப் பிறகு தென்பட்ட துருவக் கரடியை பொலிஸார் சுட்டுக் கொன்றனர்.
மக்களை அச்சுறுத்தியதால் இந்தக் கரடி சுட்டுக்கொல்லப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
"பொதுவாக நாங்கள் இப்படி செய்வதில்லை. அதில் எங்களுக்கு விருப்பமும் இல்லை.
அந்தப் பகுதியில் தனியாக இருந்த வயதான பெண் ஒருவரை துருவக் கரடி அச்சுறுத்தியது.
அதையடுத்து அவர் வீட்டின் மேல் பகுதிக்குச் சென்று பூட்டிக் கொண்டுள்ளார்.
பின்னர் தொலைபேசி மூலம் விவரத்தை தன் மகளிடம் தெரிவித்துள்ளார். உதவியும் நாடியுள்ளார். அதன் பிறகு இப்படி செய்ய வேண்டியிருந்தது" என பொலிஸ் அதிகாரி ஹெல்கி ஜென்சன் தெரிவித்தார்.
துருவக் கரடிகள் ஐஸ்லாந்தில் அதிகம் தென்படுவதில்லை. கிரீன்லாந்தில் இருந்து பனிப் பாறைகள் அடித்து வரப்படும் போது துருவக் கரடிகளும் வருவதுண்டு.
2016 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஐஸ்லாந்தில் முதல் முறையாக இப்போது தான் துருவக் கரடி தென்பட்டது குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் கமெராக்களை நிறுவ நடவடிக்கை

யாழ்.அரியாலை - சித்துப்பாத்தி மனித புதைகுழியை குற்றப்பகுதி என்று குறிப்பிட்டு, மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பு

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு
