பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நீதி கிடைக்கும் வரை அ.தி.மு.கவின் போராட்டம் தொடரும்.-- இ.பி.எஸ்

அண்ணா பல்கலைக்கழக வளாக துஸ்பிரயோக வழக்கில் அனைத்து உண்மைக் குற்றவாளிகளும் பிடிபட்டு பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்கும் வரை அ.தி.மு.கவின் போராட்டம் தொடரும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் இ.பி.எஸ். கேள்வி எழுப்பியுள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக சம்பவம் தொடர்பாக தமிழகம் முழுவதும் அ.தி.மு.க வினர் இன்று திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை உட்பட பல்வேறு இடங்களிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் அ.தி.மு.கவினர் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழக சம்பவத்தில் நீதி கேட்டும், அ.தி.மு.க வினர் கைதைக் கண்டித்தும் எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் சமூக வலைத் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
"அண்ணா பல்கலை வளாக பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி வேண்டியும், தமிழ் நாட்டில் தொடர்ந்து சிறுமிகள், கல்லூரி மாணவிகள், பெண்கள் பாதுகாப்பை கேள்விக்குறி ஆக்கியுள்ள ஸ்டாலின் அரசைக் கண்டித்தும், அ.தி.மு.க. சார்பில் தமிழ்நாடு முழுவதும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் நிலையில், ஆர்ப்பாட்டத்தில் சென்று கலந்து கொண்ட கழகத்தினரை பொலிஸார் கைது செய்து அராஜக அடக்கமுறையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மக்கள் குரலின் பிரதிபலிப்பான எதிர்க்கட்சியின் குரலை ஒடுக்க முயலும் ஸ்டாலின் அரசுக்கு எனது கடும் கண்டனம்.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் தி.மு.க வைச் சேர்ந்தவர், போதைப்பொருள் மாபியா வழக்கில் தி.மு.க. அயலக அணி மாவட்ட அமைப்பாளர், என நீளும் தி.மு.க. நிர்வாகிகளின் குற்றப் பின்னணியாலும், ஞானசேகரன் குறித்து வெளிவரும் புகைப்படங்கள் மற்றும் தகவல்களாலும், தி.மு.க. அரசு இந்த வழக்கிலும் ஏதேனும் அரசியல் தலையீடு ஏற்படுத்துமோ என்ற சந்தேகம் நாளுக்கு நாள் வலுக்கிறது.
அனைத்து உண்மைக் குற்றவாளிகளும் பிடிபட்டு பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்கும் வரை அ.இ.அ.தி.மு.க வின் போராட்டம் தொடரும்!
இந்த வழக்கில் ஞானசேகரன் குறிப்பிட்ட அந்த நபர் யார்?" - எனக் குறிப்பிட்டுள்ளார்.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
