யாழ்ப்பாண மாவட்டத்தில் யு. என். டி. பி. நிறுவனத்தின் அனுசரணையில் நடைபெற்று வரும் திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம்.





யாழ்ப்பாண மாவட்டத்தில் யு. என். டி. பி. நிறுவனத்தின் அனுசரணையில் நடைபெற்று வரும் திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டமானது யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் 20.08.2024 பிற்பகல் 02.00 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
யு. என். டி. பி. நிறுவனத்தினால் சங்கானை, தெல்லிப்பளை, கோப்பாய், கரவெட்டி மற்றும் பருத்தித்துறை ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் வாழ்வாதாரம், வீடமைப்புத் திட்டம் உள்ளடங்கலான திட்டங்களின் முன்னேற்றங்கள் ஆராயப்பட்டது.
இக் கூட்டத்தில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி), பிரதம பொறியியலாளர், கடற்றொழி்ல் உதவிப் பணிப்பாளர், பிரதி, உதவி திட்டமிடல் பணிப்பாளர்கள், அரச சார்பற்ற நிறுவன இணைப்பாளர், யு. என். டி. பி. திட்ட இணைப்பாளர் மற்றும் தொடர்புடைய உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
