சுகாதாரம், கல்வி போன்ற அடிப்படை மனித தேவைகளை பூர்த்தி செய்வது தொடர்பான விட யங்களுக்கு இடையூறு ஏற்படுவதைத் தடுப்பதற்காக, பொது மக்களின் நலன் மற்றும் பாது காப்புக்கு தேவையான புதிய சட்டத்தை உருவாக்குவது குறித்து அமைச்சரவை கவனம் செலுத்தியதாக அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.
நியாயமற்ற கோரிக்கைகளை முன்வைத்து, வேலை நிறுத்தம் உள்ளிட்ட சீர்குலைவு நடவடிக்கைகளை மேற்கொண்டு நாட்டின் நிராயுதபாணியான அப்பாவி பாடசாலை மாணவர்களையும் வைத்தியசாலைகளில் உள்ள இலட்சக்கணக்கான நோயாளர்களையும் ஏனைய பொதுச் சேவைகளில் உள்ள பொது மக்களையும் அசௌகரியத்துக்கு உள்ளாக்காது, பாதுகாப்பது பொறுப்பும் கடமையுமாக இலங்கை அரசாங்கம் கருதுவதாக அமைச்சர் மேலும் கூறினார்.
நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பி லேயே அமைச்சர் இந்தக் கருத்துக்களை தெரிவித்தார்.
அனைத்து அரசு ஊழியர்களும் வரி செலுத்துவோ ரின் பணத்திலேயே ஊதியம் பெறுகிறார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்-
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் பாராளுமன்றத்தில் அமைச்சரவை கூடிய போது, இந்த பாரிய வேலை நிறுத் தப் போராட்டம் பற்றி நிறையப் பேசப்பட்டது.
மக்கள் எதிர்நோக்கும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து வரவு-செலவுத் திட்ட ஆவணம் இந்த நாட்டின் அன்றாட அலுவல்களை நடத் துவதற்கு போதிய அரச வருமானம் இன்றி மிகவும் பய னுள்ள மற்றும் திறமையான முறையில் பணத்தை ஒதுக் கியுள்ளவேளையில், இந்த வருடத்தில் அனைத்து அரசாங்க ஊழியர்களுக்கும் 10,000 ரூபா சம்பளம் வழங்
குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்பதை அனைத்து அமைச்சரவை அமைச்சர்களும் மிகத் தெளி வாகச் சுட்டிக்காட்டினர்.
அதைவிட அதிகமான நிதித் தொகையை வழங்கு வதற்கு இலங்கை அரசிடம் எந்த அமைப்பும் இல்லை. ஏனெனில் 20,000 ரூபாவால் சம்பளத்தை அதிகரிக்க வேண்டுமானால் அதற்கு மேலதிகமாக 400 பில்லியன் ரூபா தேவைப்படுகிறது.
கை அமைச்சா CABI
அனைத்து அரசு ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம், மானியம், வட்டி போன்றவற்றை ஈடுகட்ட போதுமான அரசு வருவாய் இல்லை.
அனைத்து அரசு ஊழியர்களுக்கும் வரி செலுத்து வோரின் பணத்தில் ஊதியம் வழங்கப்படுகிறது.
இந்த பாரிய அழுத்தத்திற்கு உள்ளான மக்கள் மீதான வரியை அதிகரிப்பதற்கு அரசாங்கத்திற்கு இடமில்லை என ஜனாதிபதி வலியுறுத்தினார்.
நிதியமைச்சின் திறைசேரியின் செயலாளரும் இவ்வா றான சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கு இந்த வருடத்
தில் நிதி ஒதுக்கீடு இல்லை என மிகத் தெளிவாக விளக் கமளித்துள்ளார்.
வேலை நிறுத்தத்தால் பாடசாலைகள் மூடப்பட்ட தால், இன்று ஏராளமான குழந்தைகள் பாடசாலை கல்வி உரிமையை இழந்துள்ளனர்.
இவ்வாறானதொரு சூழ்நிலையில், பொதுச் சேவைக ளைப் பேணுவதற்கான பொறுப்பு பெரிதும் அச்சுறுத்த லுக்கு உள்ளாகியுள்ளது.
அரசியல் நலன்களின் அடிப்படையிலான வேலைநி றுத்தங்களால் அவர்களுக்கு ஏற்படும் அனைத்து மோச மான விடயங்களையும் கவனத்தில் கொண்டு, கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற அடிப்படை மனித தேவை களை பூர்த்தி செய்வது தொடர்பான சேவைகளுக்கு இடையூறு ஏற்படுவதைத் தடுக்க தேவையான புதிய சட் டத்தை அமைச்சரவை உருவாக்கியுள்ளது.
அத்துடன், பிள்ளைகளின் கல்வியை இழப்பது போன்ற பொதுச் சேவைகளைப் பெறுவதற்கு இடையூறு விளை விப்பவர்களுக்கு எதிராக சில சட்டபூர்வ வழிகளைப் பெறுவதற்கான சட்ட வரைவுகளைத் தயாரிக்க முடியும் எனவும் சட்டமா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே எதிர்காலத்தில் இந்நாட்டில் பொதுச் சேவை களைப் பெற்றுக் கொள்ளும் பொதுமக்களின் நலனுக்கா கவும் ஏனைய பொதுமக்களின் நலனுக்காகவும் சிறுவர்க ளைப் பாதுகாக்கும் சட்டங்கள் உருவாக்கப்படும்-என் றார். (अ)
තීරණ
வகள்
இந்த கூடுதல் தொகையை வழங்க, குறைந்தபட்சம் வட் வரியை 21 வீதமாக உயர்த்த வேண்டும். ஏனெனில்
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
