அழிவடைந்த வேளாண்மைக்கு நஷ்ட ஈடு, அனுமதியின்றி வெட்டிய வாய்க்காலை மூடுமாறும் கோரி மூதூரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்



அழிவடைந்த வேளாண்மைக்கு நஷ்ட ஈடு வழங்குமாறும், அனுமதியின்றி வெட்டப்பட்ட வாய்க்காலை மூடுமாறும் கோரி மூதூர் - பச்சனூர் சந்தியில் இன்று திங்கட்கிழமை (09) விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மூதூர் கமநல சேவைப் பிரிவில் உள்ள சம்மேளனங்கள் ஒன்றிணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன.
அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக மூதூர் கங்குவேலி திருக்கரைசை விவசாய சம்மேளனப் பிரிவில் எவருடைய அனுமதியுமின்றி புதிய வாய்க்கால் தோண்டப்பட்டது.
இதனால் கங்குவேலி குளத்திலிருந்தும், மேட்டுநில பரப்பிலிருந்தும் மேலதிக நீர் தமது வேளாண்மை நிலங்களுக்குள் புகுந்தது.
இதன் காரணமாக மூதூர் கமநல சேவைப் பிரிவில் சுமார் 2000 ஏக்கருக்கு மேற்பட்ட வேளாண்மை அழிவடைந்துள்ளது.
இதற்கு அரசாங்கம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும்.
வெள்ளத்தினால் தோண்டப்பட்ட வாய்க்காலை மூடுமாறும் ஆர்ப்பாட்டத்தின் போது விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
அண்மைய பதிவுகள்

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் கமெராக்களை நிறுவ நடவடிக்கை

யாழ்.அரியாலை - சித்துப்பாத்தி மனித புதைகுழியை குற்றப்பகுதி என்று குறிப்பிட்டு, மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பு

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு
