அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சர்வதேச உதவிகளை இடைநிறுத்தியதால் மலேரியா தடுப்பூசி உருவாக்கும் முயற்சி பாதிப்பு
2 months ago

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சர்வதேச உதவிகளை இடைநிறுத்தியதன் காரணமாக மலேரியா தடுப்பூசிகளை உருவாக்குவதற்கான முயற்சிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்ற பின்னர் சர்வதேச அளவில் இடம்பெற்று வந்த மருத்துவ சுகாதார ஆராய்ச்சிகள் பாதிக்கப்பட்டுள்ளமைக்கு இது ஒரு உதாரணம் என கார்டியன் தெரிவித்துள்ளது.
புதிய நவீன தடுப்பு மருந்துகளை உருவாக்குவதன் மூலம் மலேரியாவினால் சிறுவர்கள் உயிரிழப்பதை தடுக்கும் முயற்சியில் யு.எஸ்.எயிட்டின் மலேரியா தடுப்பு அபிவிருத்தி திட்டம் ஈடுபட்டுள்ளது.
மலேரியா தடுப்பு மருந்தினை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளவர்களிற்கு எம்.வி.டி.பி நிதி உதவியை வழங்குகின்றது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
