யாழ். ஸ்ரீவல்லிபுராழ்வார் ஆலயத்திற்குச் செல்லும் வீதியில் காலாவதியான குளிர்பானப் போத்தல்கள் வீசப்பட்டுள்ளன.
5 months ago

யாழ். புலோலி - கொடிகாமம் வீதியில் இருந்து துன்னாலை ஸ்ரீவல்லிபுராழ்வார் ஆலயத்திற்குச் செல்லும் வீதியில் ஆயிரக் கணக்கான காலாவதியான குளிர்பானப் போத்தல்கள் வீசப்பட்டுள்ளன.
இப் பகுதியில் பருத்தித்துறை பிரதேச சபையினரின் கழிவுகள் கொட்டப்படும் பகுதி உள்ளது.
இப் பகுதியில் தனியார் பலரும் கழிவுகளை பாதுகாப்பற்ற முறையில் கொட்டி வருகின்றனர்.
இந்தப் பகுதியை அண்மித்தே வீதியோரமாக காலாவதியான ஆயிரக் கணக்கான குளிர்பானப் போத்தல்கள் கொட்டப்பட்டுள்ளன.
இப் பகுதியில் வீதியோரமாக பாதுகாப்பற்ற முறையில் தனியார் பலரும் கழிவுகளைக் கொட்டுவதானால் இவ் வீதியால் பயணிக்க முடியாதவாறு துர்நாற்றம் வீசி வருவதுடன், டெங்கு நுளம்பு உற்பத்தியாகும் அபாயகரமான இடமாகவும் காணப்படுகிறது.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
