சர்வதேச தினமான இன்று (12) மாற்றுத்திறனாளிகளால் வவுனியாவில் விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்று முன்னெடுப்பு
5 months ago










இயலாமையுடன் கூடிய நபர்களுக்கான சர்வதேச தினமான இன்று (12) மாற்றுத்திறனாளிகளால் வவுனியாவில் விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
'உள்வாங்கல் மற்றும் நிலையான எதிர்காலத்திற்காக இயலாமை உடையவர்களின் தலைமைத்துவத்தை விரிவுபடுத்தல்' எனும் தொனிப் பொருளில் வவுனியா புதிய பஸ் நிலையத்திற்கு முன்பாக ஆரம்பமான ஊர்வலம் வைத்தியசாலை சுற்று வட்டத்தை அடைந்து அங்கிருந்து வவுனியா நகர சபை கலாசார மண்டபத்தை அடைந்தது.ஏனைய நிகழ்வுகள் அங்கு இடம்பெற்றன.
ஊர்வலத்தில் ஈடுபட்டவர்கள், “நம்பிக்கை மனதில் உண்டு நம்பிக்கை கொடுங்கள், தொழில் உரிமை அனைவருக்கும் உண்டு, திறமைக்கு இயலாதமைகள் அல்ல போன்ற வாசகங்கள் தாங்கிய பதாதைகளை ஏந்தியிருந்தனர்.
இந்த நிகழ்வை வவுனியா மாவட்ட செயலகம் மற்றும் ஓஹான் நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
