40 வருடங்களுக்கு மேலாக போக்குவரத்து வசதியில்லா மட்டக்களப்பு மாவலையாறு கிராமத்துக்கு புதிய பேருந்து சேவை

40 வருடங்களுக்கு மேலாக போக்குவரத்து வசதியின்றி அவதியுற்ற மக்களுக்கான புதிய பேருந்து சேவை மட்டக்களப்பு, ஏறாவூர் இலங்கை போக்குவரத்து சபை சாலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபுவின் வேண்டுகோளுக்கு அமைய இந்த பஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பின்தங்கிய பிரதேசமான மாவலையாறு கிராமத்துக்கு செங்கலடி ஊடாக இந்த பஸ் சேவையை பாராளுமன்ற உறுப்பினர் பிரபு ஆரம்பித்து வைத்தார்.
இ.போ.ச. ஏறாவூர் சாலையின் முகாமையாளர் எம். எம். ஷைனி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இ.போ. ச. பிராந்திய முகாமையாளர் ஆர். எம். விஜித தர்மசேன உட்பட பலரும் கலந்துகொண்டனர்
செங்கலடியில் இருந்து காலை வேளையில் புறப்படும் இந்த பஸ் மாவலையாறு, மாவடிச்சேனை, சிவத்த பாலம் உட்பட பல கிராமங்களின் ஊடாக சுமார் 28 கிலோ மீற்றர் வரை பயணத்தை மேற்கொள்ளவுள்ளது.
சுமார் 40 வருடங்களுக்கு மேலாக பஸ் போக்குவரத்து வசதியின்றி பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர் கொண்டு வந்த நிலையில், இந்த பஸ் சேவையை ஆரம்பித்ததில் திருப்தியடைவதாக அப் பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
