போரில் உயிரிழந்த விடுதலைப் புலிகள், தமிழர்கள், ஜே.வி.பி உறுப்பினர்களை நினைவு கூருவதும் ஒரே மாதிரியானவை எம்.பி கஜேந்திரகுமார் தெரிவிப்பு

யுத்தத்தின்போது உயிரிழந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களையும் தங்கள் உயிர்களை இழந்த தமிழர்களையும் நினைவு கூருவதும் ஜே.வி.பியின் நினைவு கூரல்களும் ஒரே மாதிரியானவை.
வித்தியாசங்கள் இருக்க முடியாது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நேற்று (04) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்-
யுத்தத்தின்போது உயிரிழந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களையும் தங்கள் உயிர்களை இழந்த தமிழர்களையும் நினைவு கூருவதும் ஜே.வி.பியின் நினைவு கூரல்களும் ஒரே மாதிரியானவை.
வித்தியாசங்கள் இருக்க முடியாது. இரண்டு ஆயுதப் போராட்டங்களும் அரசாங்கத்தினால் மௌனமாக்கப்பட்டன.
இரண்டு ஆயுதப் போராட்டங்களும் நியாயபூர்வமானவை. மக்கள் ஏன் ஆயுதமேந்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்கள் என்பதற்கான நியாயபூர்வமான காரணங்கள் உள்ளன. அங்கிருந்தே நாங்கள் வருகின்றோம்,
ஆனால் இந்த நியாயபூர்வமான பிரச்சினைகளுக்கு தீர்வை காணாமல் ஒரு தரப்பை தடைகள் இன்றி செயற்படவும் நினைவு கூரல்களில் ஈடுபடவும் அனுமதிப்பதும்,ஏனைய தரப்பின் மீது சில கட்டுப்பாடுகளை விதிப்பதும் நியாயமான விடயம் என நான் கருதவில்லை.
நினைவேந்தல் தொடர்பான இந்த கட்டுப்பாடுகள் 2011ஆம் ஆண்டு சுற்றறிக்கையை அடிப்படையாக கொண்டவை.
உங்கள் அரசாங்கம் இனவாத அரசாங்கம் என குறிப்பிடும் அரசாங்கத்தின் காலத்திலேயே இந்த சுற்றிக்கை வெளியானது.
அந்த அரசாங்கத்தின் காலத்தில் வெளியிடப்பட்ட நீங்கள் எப்படி நினைவு கூரல்களை முன்னெடுக்க முடியும் என தெரிவிக்கும் சுற்றறிக் கையை நீங்கள் நடைமுறைப்படுத்தும் போது அது முற்றாக நியாயமற்ற விடயம்.
இந்த தவறை திருத்திக் கொள்ள வேண்டும் என நான் இந்த அரசாங்கத்தை கேட்டுக் கொள்கின்றேன்.
பயங்கரவாத தடைச் சட்டத்தை வடக்கில் மாத்திரமல்ல தெற்கிலும் பயன்படுத்தக்கூடாது என நான் வேண்டுகோள் விடுக்கின்றேன். என்றார்.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
