இந்தியா திருவள்ளுவர் உலக சாதனையாளர் அமைப்பு இலங்கையைச் சேர்ந்தவர்களுக்கும் கலாம் விருது அறிவிப்பு
7 months ago

இந்தியாவின் பாண்டிச்சேரியை (புதுச்சேரி) மையமாகக் கொண்ட திருவள்ளுவர் உலக சாதனையாளர் அமைப்பு இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியும் புகழ்பெற்ற விஞ்ஞானியுமான அப்துல்கலாம் நினைவாக கலாம் விருதுகளை வழங்கி வருகிறது.
இதில், இலங்கையின் இலக்கியத் துறையை சார்ந்தோருக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
எதிர்வரும் நவம்பர் 9ஆம் திகதி புதுவை தமிழ்ச் சங்கத்தில் இந்த விருதுகள் வழங்கப்படவுள்ளன.
இதன்படி, கவிதாயினி சிவரூபன் சர்வேஸ்வரி, கலாநிதி சூரியகுமாரி இராசேந்திரம், நெடுந்தீவு செ. மகேஷ் ஆகியோர் கலாம் சாதனை ரத்னா விருதுகள் பெறவுள்ளனர்.
கவிஞர் வி. அபிவர்ணா, அரியநாயகம் சிறீதர், கவிஞர் குமாரவேலு டனீஸ்வரன், கலாநிதி சூரியகுமாரி இராசேந்திரம் ஆகியோர் கலாம் சாதனையாளர் விருதுகள் பெறவுள்ளனர்.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
